மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி 61ஆவது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.விஜயா போட்டியிடுகிறார். இந்த வார்டுக்கான தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, பிரச்சாரத்தை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார், பா.பாலகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, திமுக ஒன்றியச் செயலாளர் த.ஜெயக்குமார், பேரூர் செயலாளர் சங்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் மா.வை.மகேந்திரன், பொருளாளர் நாராயணன், பேரூர் செயலாளர் சகாதேவன், விசிக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
♦♦♦
ஆவடி மாநகராட்சி 10 வது வார்டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் ஏ.ஜானை ஆதரித்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா. மு. நாசர், திருவள்ளுர் மத்திய மாவட்டச் செயலாளர் பேபி சேகர், ராஜி, நரேஷ், சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், திமுக வட்டச் செயலாளர் உதயகுமார், துருவன், சுந்தர் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
♦♦♦
சென்னை மாநகராட்சி 66வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுகவேட்பாளர்யோகப்பிரியா காமராஜ் நகர், காந்திநகர், வெற்றி நகர், சிவசக்தி நகர் ஆகிய தெருக்களில் வாக்குகளை சேகரித்தார்.
♦♦♦
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆரணி பேரூராட்சி 1ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பச்சையம்மாள் புதனன்று (பிப்.9) வாக்கு சேகரித்தார். இதை திமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பகலவன் துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
♦♦♦
காஞ்சிபுரம் மாநகராட்சி 1ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், அப்பள தொழிலாளியான எம்.ராபியா பானு, அப்பளம் மாலை அணிந்து வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க பாடுபடுவேன் என்பதை வலியுறுத்தி ஒலிமுகமது பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் கே.நேரு, மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி, கோவிந்தசாமி, சுரேஷ், முகமது ரபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
♦♦♦