திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு வாக்கு கேட்டு திருவேற்காடு பகுதியில் உள்ள கடைகளில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர், நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், பெஞ்சமின், குமாரசாமி, அரசு, நடராஜ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இ.யுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், தொகுதி செயலாளர் அ.ஜான், விசிக நகரச் செயலாளர் மு.ஆதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.