ஐஇடி கல்வி உதவித்தொகை விருதை வென்ற விஐடி மாணவி
சென்னை, டிச.26- பெரிதும் மதிக்கப்படும் ஐஇடி ஸ்காலர்ஷிப் விருது 2023 க்கு இந்த ஆண்டிற்கான தேசிய அளவிலான வெற்றி யாளராக வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி) நான்காவது ஆண்டு மாணவி பிரகதி பட்டாட் தேர்வு செய்யப்பட்டடுள்ளார். பொறியியல் துறையில் உலகளாவிய அமைப்பான தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (ஐஇடி) இதனை அறிவித்துள்ளது. வலை யமைப்பையும், சேமிப்பக பாதுகாப்பையும் மேம்படுத்துவ தன் மூலம் தொலைதூர மருத்துவ செயல்முறைகளைக் கொண்டு (ஆர்.எம்.பி) சுகாதார பராமரிப்பு மற்றும் சிகிச் சையை மேம்படுத்துவது குறித்து ஒரு புதுமையான தீர்வை வழங்கியதற்காக இவ்விருது பிரகதிக்கு வழங்கப் பட்டுள்ளது.
பிரியாணி கடையில் வேலை செய்தவர் கொலை
திருவள்ளூர், டிச.26 - திருவள்ளூர் பேருந்து நிலையம் எதிரில் பொன்னேரியைச் சேர்ந்த அஜீஸ்அகமது என்பவர் அல்நூர் என்ற பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோபியாரா என்ப வரது மகன் ராஜா (20) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் திங்களன்று (டிச 25), இரவு பீகார் இளைஞர் உடல் நிலை சரியில்லாத தால் உரிமையாளர் தங்கும் வீட்டில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றார். அதே போல் ரோஹித்ஷர்மாவும் அவருடன் அங்கு சென்று படுத்துக் கொண்டார் . இந்நிலையில் திங்களன்று நள்ளிரவு 11 மணி வரை ராஜா மற்றும் ரோஹீத்ஷர்மா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிழமை காலை ராஜாவும், ரோஹித்ஷர்மாவும் வேலைக்கு வராததால் உடன் வேலை செய்பவர்கள் உரிமையாளர் தங்கும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே ராஜா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜாவின் உடல் அருகே பளு தூக்கும் கருவியால் தலையில் தாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜாவின் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சம்பவ இடத்திலிருந்து அனுப்பிவைத்தனர். தப்பிய ஓடிய நேபாள இளைஞரை காவல்துறையி னர் தேடி வருகிறார்கள்.
நெல் மகசூல் போட்டி
விழுப்புரம், டிச.26- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை தென்பசியார் கிராமத்தில் நெல் பயிரில் மகசூல் போட்டித் திட்டத்தின் கீழ் அறுவடை பணிகள் அண்மையில் நடைபெற்றன. பல்வேறு தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளிடையே உற்பத்தியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாநில அரசின் நிதியுதவியுடன் பயிர் மகசூல் போட்டி திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட அளவில் வேளாண் துறை மூலம் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்ற திண்டிவனம் ஜக்காம் பேட்டை அருகில் உள்ள தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்பில் பொய்யாமொழி வயலில் 50 சென்ட் நிலத்தில் மகசூல் போட்டித் திட்டத்தின் கீழ் பயிரிடப்படும் நெல் அறுவடை பணிகள் அண்மையில் நடைபெற்றன. இந்த போட்டியில் பங்கேற்ற விவசாயிகள் நிலங்களில் அறுவடை பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நெற்பயிர் விளைச்சல் போட்டி
கிருஷ்ணகிரி,டிச.26- பாளேத்தோட்டம் கிராமத்தில் நடந்த பாரம்பரிய நெற்பயிர் விளைச்சல் போட்டியை, வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார். பர்கூர் வட்டாரம், பாளேத்தோட்டம் கிராமத்து விவசாயி சுப்பிரமணி பல ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் சாகுபடி செய்து வருகிறார். இவர் தனது வயலில் பாரம்பரிய நெற்பயிரான இலுப்பம்பூ சம்பா ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்து மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்கு பதிவு செய்திருந்தார். பயிர் விளைச்சல் போட்டிக்கான அறுவடை நடைபெற்றது. போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பச்சையப்பன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அருள்வடிவு, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரான (வேளாண்மை) சீனிவாசன்,வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வானதி, சிவசங்கரி, திம்மிநாயக்கன்பட்டி கிராம விவசாய பிரதிநிதி முருகவேல் ஆகியோர் நடுவராக செயல்பட்டனர்.
ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை,டிச.26- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் செங்கம் வனப்பகுதி அருகே கார் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது கன்று குட்டி மீது மோதியதில் அது உயிரிழந்தது. ஆனால், அந்த கார் நிற்காமல் அதிவிரைவாக சென்றது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மடக்கினர். அப்போது, காரில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை சோதனை செய்த போது, சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 80 மூட்டையில் பதுக்கி கடத்தி வந்த குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மாணவர்கள் குடும்பத்திற்கு எம்எல்ஏ ஆறுதல்
கிருஷ்ணகிரி,டிச.26- பர்கூர் ஜி.நாகமங்கலம் கிரி, அஜய், அம்பேத்கர் காலனி ராகவன் ஆகிய 3 மாணவர்களும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரியில் சிக்கி உயிரிழந்தனர். இந்த தகவலை அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் தே.மதியழகன், இறந்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.
ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்
கிருஷ்ணகிரி,டிச.25- ஓசூர் பார் அசோசியேஷன் தேர்தல், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக ஆனந்தகுமார், செயலாளராக திம்மராயப்பா, பொருளாளராக அப்துல் ரஹீம், நூலகராக வெங்கடேஷ்,துணைத் தலைவர்களாக ஜெயசீலன்,அகிலா இணைச் செயலாளராக முனிச்சந்திரா,கோகிலா நிர்வாகிகளாக உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.