செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு சோகண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார். அப்போது, ஆசிரியர்களிடம் மாணவர்கள் வருகை மற்றும் காலை உணவுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வகுப்பறை ஒன்றுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார்.