மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், பள்ளி கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் தலைமையில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காவியா, பழனி, வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.