districts

வாகன நிறுத்த இடங்களில் விதிமீறுவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும்

சென்னை, ஜூன் 23- சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரப் போக்கு வரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  மாநக ராட்சியின் சார்பில் வாகனங்கள் நிறுத்துவ தற்காக 80 இடங்களில் சுமார் 12,000 வாகனங் கள் நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்ட றியப்பட்டு செயல்பட்டு வருகிறது.   இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு  மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்க ளுக்கு ரூ.20 எனவும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 எனவும் கட்டடணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்களில் பொது மக்கள் வாகனங்களை நிறுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பாளரின் மூலம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை பயன்படுத்தி ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வாகன நிறுத்தங்களாக அறிவிக்கப் பட்டுள்ள 80 இடங்கள் குறித்த தகவல்களை https://chennaicorporation.gov.in/gcc/pdf/ECS.pdf என்ற இணைப்பின் வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.     மேற்குறிப்பிட்ட வாகன நிறுத்தங்களில் ஒரு சில இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு அதற்கான கட்டணத்தை ஒரு சில  உரிமையாளர்கள் செலுத்தாமல் விதிமுறை களை மீறி சென்று விடுகின்றனர். விதிமுறை களை மீறி வாகனங்களை நிறுத்தும் நபர்கள்  மற்றும் கட்டணம் செலுத்தாத நபர்கள் மீது  மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மாநகராட்சியின் சமீபத்திய கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.