விழுப்புரம்,டிச.2- நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அமைச்சர் கேஎன்நேரு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளிலும் வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திரு வெண்ணெய்நல்லூர், அரகண்ட நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சி களில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணி களின் நிலவரம், அப்பணிகள் எப்போது முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு மக்களுக்கான அடிப்படை வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தர விட்டார். விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் திட்டங்கள், விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகள், திண்டி வனம் நகராட்சியில் புதிய பேருந்து நிலைய பணிகள், வளர்ச்சிப்பணிகளை முன்னுரிமை அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் துறை அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார். அதேபோல் பேரூராட்சிகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளில் என்னென்ன திட்டங்கள் தேவை என்று உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,“விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிக்கப்படும் என்றும் ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக சாலைப்பணிகள் மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.