districts

img

குளமாக மாறிய விழுப்புரம் பேருந்து நிலையம்

விழுப்புரம், டிச. 13- விழுப்புரம் மாவட்ட த்தில் புயலுக்கு பின்னும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி யளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரண மாக, விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பயணிகள் சிரமப்பட்ட னர். அதேபோல் கீழ்பெரும் பாக்கம் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்  பட்டனர். கடந்த சில ஆண்டுக ளாகவே வடகிழக்கு பருவ மழையின் போதும், அவ்வப்போது பெய்யும் கன மழையின் போதும் விழுப்புரம் நகராட்சி பகுதி யில் பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதும் அது தானாகவே வெளி யேறுவதும் தான் வாடிக்கை யாக உள்ளது. எனவே நிரந்தரமாக தண்ணீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.