விழுப்புரம்,ஜன.30- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரி விக்க 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்க லாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான த.மோகன் தெரி வித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் விடுத்திருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய த்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்ட வணை அறிவிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூ ராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும் மற்றும் புகார் தெரிவிக்கவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக (தேர்தல்) பிரிவு, கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது,தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் தெரிவித்திட 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.