சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகம் மேனாள் நீதிபதி சந்துரு இன்று திறந்து வைக்கிறார்
சென்னை,பிப்.19- மாற்றுத்திறனுடைய நபர்கள் மாற்றுத் திறனற்ற நபர்களை விட அதிக சமூக பொருளாதார தாக்கங்களை எதிர்கொள் கின்றனர். சாமான்யருக்கு வாழ்க்கை யில் தான் போராட்டம் ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கோ வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் சூழலில் அவர் களுக்காக தனித்துவம் வாய்ந்த மாபெரும் சங்கமாக விளங்குகிறது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இந்த அமைப்பின் மாநில அலுவலக திறப்பு விழா சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ்சாலையில் செவ்வா யன்று (பிப்.20) உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சந்துரு திறந்து வைக்கிறார். சங்கக் கொடியை அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் ஏற்றி வைக்கிறார். விழாவின் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாநில பொதுச்செய லாளர் பா.ஜான்சிராணி தலைமையில் மாநிலத்தலைவர் தோ.வில்சன் வரவேற் புரையாற்றுகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தன்வாழ்நாள் முழுவதும் போராடி மறைந்த தோழர் டி.லட்சுமணன் படத்தை மாநிலத்துணைத்தலைவர் ப.சு.பாரதி அண்ணா திறந்து வைக்கிறார். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி, தாளாளர் தாவூத் மியாகான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி.சம்பத், டிசம்பர்3 இயக்கம் தலைவர் டி.எம்.என்.தீபக், பி.மனோகரன் (தேசிய பார்வையற்றோர் இணயம்), இரா.தெ.முத்து (தமுஎகச), டி.செந்தில்குமார் (ஏஐஐஇஏ), எஸ்.வாலண்டினா (அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம்), ப.சிம்ம சந்திரன் (மாற்றுத் திறனாளிசங்களின் கூட்டமைப்பு) , பாலாஜிசம்பத் (எய்டு இந்தியா), ஆர்.ராதா கிருஷ்ணன் (கருணைடிரஸ்ட்), பா.சுவாமி நாதன்(கட்டிடஉரிமையாளர்), எம்.உஷாராணி (சென்னை தீக்கதிர் பொது மேலாளர்) ஆகியோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக தென்சென்னை மாவட்டச்செயலாளர் எம்.குமார் நன்றி நவில்கிறார்.
போதை பாக்கு: 39 பேர் கைது
சென்னை, பிப். 19- தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகை யிலை பொருட்களை முற்றி லும் ஒழிப்பதற்காக சிறப்பு நடவடிக்கையை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில்,கடந்த பிப்.12ஆம் தேதி முதல் 18 வரையிலான 7 நாட்க ளில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 39 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி: சிபிஎம் கோரிக்கை ஏற்பு
சென்னை,பிப்.19- “வட சென்னை வளர்ச்சித் திட்டம்ட” எனும் புதிய முயற்சியை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை மாநகரத்தின் சில பகுதி களில் குறிப்பாக வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்ட மைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. எனவே, சமச்சீர் வளர்ச்சியை இதனால் உறுதி செய்ய முடியும் என்றார். இதன்மூலம் வடசென்னையில் புதிய குடி யிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும். மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறி முகம் செய்யப்படும். வடசென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. விரைவான நகரமயாக்கலின் விளை வாக சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துள் ளது. இதனால் ஏற்படும் கடும் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம்-செங்குன்றம் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ண மூர்த்தி சாலைகள் 30.5 மீட்டர் சாலையாக ரூ.300 கோடியில் அகலப்படுத்தப்படும். எண்ணுர், கோவளம், பெசன்ட் நகர் ஆகய கடற்கரைப் பகுதிகள் ரூ.100 கோடியில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுப்படுத்தப்படும். ரூ.500 கோடியில் திரைப்பட நகரம் சென்னை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதி நவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இதற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகள் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற்ச் சீரமைக்கும் திட்டம் தனியார், அரசு பங்களிப்புடன் ரூ.1,500 கோடியில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
விழுப்புரம், செங்கல்பட்டில் தூண்டில் வளைவு
சென்னை, பிப்.19- வரும் நிதியாண்டில், கன்னியாகுமரி, நாகப்பட்டிணம், ராமநாத புரம், தஞ்சாவூர், மயிலாடு துறை, திருவாரூர், செங்கல் பட்டு, விழுப்புரம், திரு வள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தூண்டில் வளைவு, மின் இறங்கு தளம், தூர் வாரு தல், செயற்கை மீன் உறை விடங்கள் போன்ற கரை யோர பாதுகாப்பு மற்றும் கட்டுமான பணிகள் ரூ. 450 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரி விக்கப்பட்டுள்ளது. கண்காட்சி அரங்கம் சென்னையில் நான்கு லட்சம் சதூர அடி பரப்பள வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப் படுத்தும் கண்காட்சி அரங்கம், கைவினைப் பொருட்களுக்கான வடி வமைப்பு மற்றும் புத்தாக்க மையம், திறந்தவெளி விற்பனை அரங்கம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட புதிய ஒன்றிணைந்த வளாகம் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
செல்போன் பறிக்க முயற்சி: தந்தை, மகள் படுகாயம்
சென்னை, பிப். 19- சென்னை மதுரவாயலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்ய முயன்றபோது, கீழே விழுந்து தந்தையும்,மகளும் பலத்த காயமடைந்தனர். மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம், ராஜீவ் காந்தி நகர் எம்.ஜி.ஆர்.பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் மகள் சரஸ்வதி (26). மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு சரஸ்வதி படிக்கிறார். சரஸ்வதி, திங்கட்கிழமை காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக தனது தந்தை நாகராஜூடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆலப்பாக்கம் பிரதான சாலையில் செல்லும்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்கள், பின் இருக்கையில் அமர்ந்திருந்த சரஸ்வதி கையில் இருந்த கைபேசியை பறித்தனர். இதில் கைப்பேசி பறிக்கும் போது, மோட்டார் சைக்கிளில் இருந்து நாகராஜ், சரஸ்வதியும் கீழே விழுந்த னர். இதைப் பார்த்த அந்த இரு மர்ம நபர்களும், அங்கி ருந்து தப்பியோடினர். விபத்தில் பலத்த காயமடைந்த நாக ராஜ்,சரஸ்வதியை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி மாணவர் பலி ஆவடி, பிப்.19- அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். சோழபுரம் நேரு நகர், 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுநர். அவரது மகன் சுரேஷ் (16). இவர் அம்பத்தூர், ராம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை சுரேஷ் தனது நண்பர்களுடன் அம்பத்தூர், முருகாம் பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளித்துள்ளார். அப்போது சுரேஷ் ஏரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.