districts

குடிநீரின்றி தவிக்கும் கிராமமக்கள் கவலையின்றி விழுப்புரம் அதிகாரிகள்

சாதிவெறியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டி யில் மலத்தைக் கலந்தார்கள். விழுப்புரம் மாவட்டம், புதுக்குப்பம் கிராமத்திலோ தலித் ஊராட்சி மன்றத் தலைவரை செயல்பட விடக்கூடாது என்ற தீய நோக்கத் தோடு சொந்த சாதி மக்களுக்கே குடிநீர் வழங்க மறுத்து தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் வானூர் ஒன்றியம் புதுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலை வர் பதவி தலித்துக்கு ஒதுக்கப் பட்டது. புதுக்குப்பம் கிராம ஆதிக்க சக்திகள் ஆதரித்த வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். துணை கிராம மான எடச்சேரி மக்களின ஆதரவைப் பெற்ற வேலு என்ற தலித் தலைவரானார். அவர்கள் நிறுத்திய வேட்பாளர் தோற்றுப்போனதால் ஆத்திர முற்ற புதுக்குப்பம் கிராம சாதிவெறியர்கள் முதல் நாளி லிருந்தே தலைவரை செயல்பட விடாமல் தடுத்து வருகின்றனர். புதுக்குப்பம் ஊராட்சி, எடச்சேரி கிராமத்தில் 250 விவசாய குடும்பங்கள் உள்ளன. நிலத்தடி நீர் உப்பு நீராக உள்ளதால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல குடிநீர் கேட்டுப் போராடி வருகின்றனர். உரிய அனுமதி பெற்று 25.9.2022 அன்று புதுக்குப்பத்தில் இருந்து பைப்லைன் புதைக்க ஊராட்சி மன்றத் தலைவர் வேலு நடவடிக்கை எடுத்தார்.  மறுநாளே  சில சமூகவிரோதிகள் பைப்புகளை தோண்டி உடைத்து விட்டனர். இதுகுறித்து கிளியனூர் காவல் நிலையத்தில் தலைவர் புகார் அளித்தும், இன்றுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் 14.10.2022 அன்று கிளியனூரில் சாலை மறியல் நடைபெற்றது.

பின்னர் சமா தானக் கூட்டம் நடத்தி உடனடியாக குடிநீர் வழங்குவதாக ஒன்றிய அதி காரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகும் குடிநீர் கிடைக்காத தால் 1.12.2022 அன்று வானூர் ஒன்றிய ஆணையாளர் அலுவல கம் எதிரில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியப் பெருந்தலைவரும் அதி காரிகளும் இப்போதே போர் போட ஆரம்பிக்கிறோம் என்று உறுதி மொழி அளித்ததால் மக்கள் திரும்பிச் சென்றனர். போர் போடும் இயந்திரத்தை புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீண்டும் தடுத்து அனுப்பி விட்டனர். இதைக் கேள்விப்பட்ட எடச்சேரி மக்கள் மீண்டும் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். இரவு 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மறுநாளே கோட்டாட்சியரை அனுப்பி தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தார். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.                    

        மறுநாள் (டிச. 12) ஆய்வு செய்ய வந்த கோட்டாட்சியரையும் சிலர் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர். 4.12.2022 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். அவர் ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்கு வதாக வாக்குறுதி அளித்தார். புதிய போர் போட எதிர்ப்பு ஏற்பட்டதால் பழைய போரில் தண்ணீர் இறைத்துப் பார்த்தார்கள்.  வழியில் கிராம விவசாயிகளின் பட்டா நிலம் உள்ளதால் பைப்லைன் புதைக்க எதிர்க்கிறார்கள் எனக்கூறி அதிகாரிகள் கிடப்பில் போட்டு விட்டனர். திமுக மாவட்டக் கவுன்சிலரின் கணவர் குப்புசாமியின் குறுக்கீடு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் குடிநீர் தடை செய்யப்படுகிறது. புதுக்குப்பம் ஊராட்சித் தலைவர் தலித் என்பதால் ஆதிக்க சக்திகள் தலையிட்டு அவர் தலைவராக இருக்கும்போது எடச்சேரிக்கு குடிநீர் கிடைக்கக் கூடாது என்ற சாதிவெறியோடு தடுக்கிறார்கள். ஆளுங்கட்சி பிரமுகர் தலையீடு காரணமாக அரசு நிர்வாகம் செய லிழந்து கிடக்கிறது. தலைவர் தனது அலுவல கத்திற்கு 11.12.2022 அன்று சென்ற போது புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அவரை தகாக வார்த்தையில் சாதியைச் சொல்லித் திட்டி, கத்தியால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்தான புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை சிபிஎம் தலை வர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகே குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சாதி வெறியர்கள் அப்பாவி கிராம மக்களைத் தூண்டிவிட்டு 26.11.2022 அன்று மாவட்ட ஆட்சி யரிடம் புதுக்குப்பம் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்தனர். 30.12.2022 அன்று சிபிஎம் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடிநீர் வழங்கக் கோரி வலியுறுத்தினர். அதன் பிறகும் உறுதியான நடவடிக்கை இல்லை. எடச்சேரி மக்களுக்கு உடனடி யாக போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்கக் கோரியும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு சாதி வெறியர்களிடமிருந்து தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.   -சி.முத்துக்குமரன் சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்டம்.