districts

img

உழைப்பாளி மக்களுக்காக போராடும் சிபிஎம் கட்சிக்கு தாராளமாக நிதி அன்பால் மூழ்கடித்த கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராமங்கள் தோறும் சென்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி கட்சி ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து எடுத்துச் சொல்லி உண்டியல் நிதி வசூல் செய்து வருகிறோம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கிராமப் புறங்கள் நிறைந்த விவசாயம் மற்றும் விவ சாய கூலி தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டமாகும். விழுப்புரத்தில் இருந்து பிரிந்த பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்சி பணிகளுக்கு தொடர்ந்து மக்களிடம்  உண்டியல் ஏந்தி வசூல் செய்வது என்ற முடிவை அமல்படுத்தி வருகிறோம். மக்கள் போராட்டங்களில்  கண்ட வெற்றி ! இம்மாவட்டம் முழுவதும் அடித்தட்டு ஏழை கூலி விவசாயிகளின் பிரச்ச னைகளை கையில் எடுத்து களமாடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் சமரசமின்றி எளிய வர்களின் பக்கம் நின்று போராடியதன் வெற்றியே வெகுஜன நிதி வசூலில் மக்களின் அமோக ஆதரவு கிடைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. சமூக ஒடுக்குமுறைக்கு  எதிரான போராட்டங்கள் கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு தொடர் போராட்டம் நடத்தி 1600 பட்டா பெற்றுத் தந்தோம். திருநாவலூர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அடகு வைத்த நகைகள் திருடு போனதை கண்டித்து பல கட்ட போராட்டம் நடத்தினோம். உளுந்தூர்பேட்டை ரயில் நிலை யத்தில் கொல்லம் ரயில் நின்று செல்ல கோரிக்கையில் வெற்றி கண்டோம், சங்கராபுரம் தாலுகாவில் அரசம்பட்டு, கொசப்பாடி,ரங்கப்பனூர், ஆகிய கிராமங்களில் இலவச மனை பட்டா பெற்று தர பல கட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடியதன்  விளைவாக  கிராமங்கள் தோறும் மக்கள் வரவேற்று நிதியளித்து வருகிறார்கள்.  உண்டியல் வசூல் ஜனவரி 10 ஆம்தேதி  முதல் 20  ஆம் தேதி வரை உண்டியல் வசூல் என்று முடிவு செய்து 10 நாட்களில் 320 குழுக்கள் 1766  ஊழியர்கள் மூலம் 13 லட்சத்து 12 ஆயிரத்து 816 ரூபாய் உண்டியல் வசூல் செய்யப்பட்டது, உற்சாகத்தில் தோழர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து இடைக்குழு செயலாளர்களை தயார் செய்து கமிட்டி குழுக்கள் தயார் படுத்தி கடுமையான பனியிலும் குளிரிலும் கிராமங்களுக்கு சென்று 7 மணிக்கு வசூலை தொடங்கி 10 மணிக்கு முடித்த னர். மாலை ஐந்து மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது இந்த நிதி வசூலின்போது ஊழியர்க ளுக்கு உடல்நிலை சரியில்லாத போதும், கட்சிக்கு உண்டியல் மூலம் வசூல் செய்து நிதியை சேர்ப்பது என்ற உணர்வோடும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.  முன்னதாக, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் வசிக்கும் கிராமங்களான கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையம்,மேல்விழி,சின்னசேலம் மேல்நாரியப்பனூர், சங்கராபுரம், ரிஷி வந்தியம் இருதயபுரம், மையனூர், ராயபுரம், ஈருவுடையான்பட்டு, தொண்டா முத்தூர்,திருக்கோவிலூர் அத்திப் பாக்கம், உளுந்தூர்பேட்டை மேற்கு எறையூர்,திருநாவலூர் மேற்கு இருந்தை, திருநாவலூர் கிழக்கு மாரனோடை ஆகிய இடங்களில் ஒருநாள் வசூல் இயக்கம் நடத்தப்பட்டது. தோழர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தும் மதிய உண வளித்தும்  நிதி அளித்தும் கிறிஸ்துவ மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டனர்.  அன்றைய தினம் மட்டும் 2 லட்சம் ரூபாய் வசூலானது. பெஞ்சால் புயல் மற்றும் வெள்ளம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விவசாய பயிர்கள் சேதம் அடைந்த நிலையிலும் கிராமங்கள் தோறும் விவசாயிகள் முகம் சுளிக்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிதி அளித்தனர். இந்த ஆண்டு மாவட்டத்தில் இளைய தலைமுறை தோழர்களை வசூலில் ஈடுபடுத்தி கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கோட்பாடுகள் மக்கள் போராட்டங்கள் ஆகியவைகளை எடுத்துக் கூறி நடத்தப்பட்ட உண்டி யல் நிதி வசூல் வெற்றிகரமாக அமைந்துள்ளது. டி.எம்.ஜெய்சங்கர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கள்ளக்குறிச்சி