விழுப்புரம், ஜன. 7- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எண்டியூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திண்டிவனம் மரக்காணம் செல்லும் சாலை ஓரம் வசிக்கும் இந்த மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் பள்ளம் தோண்டி அந்த வழியாகச் செல்லும் குழாய் மூலம் தண்ணீர் பிடிகிறார்கள். இந்த தண்ணீரை பருகுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்க நவடடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.