districts

img

சாலையை சீரமைக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி,நவ.5- கிருஷ்ணகிரியில் கணவாய்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில் முதல் மேலேரிகொட்டாய் வரை 3 கிலோ மீட்டர் தூர சாலைகள் நீண்ட காலமாக குண்டும் குழியுமாகவும் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாகவும் உள்ளது.  இதனால் இப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் தினமும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் இதில் பள்ளிக்கு சென்று வர முடிவதில்லை, கிராமத்திற்கு கழிவு நீர் கால்வாய், குடிநீர் வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இது குறித்து பலமுறை பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் சனிக்கிழமையன்று மேலேறி கொட்டாய் கிராம மக்கள் கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வருவாய் துறையினர்,ஊராட்சி தலைவர் நாராயணன் மாவட்ட கவுன்சில் வார்டு உறுப்பினர் ஆஜி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சாலையை சீர்படுத்திடவும் கழிவு நீர் கால்வாய்கள் அமைத்திடவும்,குடிநீர் வசதி செய்திடவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.