districts

img

நெல்லையில் நம்பிக்கையின் வெற்றி! பாளையங்கோட்டை மக்களிடமிருந்து ரூ.6 லட்சம் நிதி திரட்டிய மார்க்சிஸ்ட் கட்சி

நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு தோறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் கட்சி நிதி திரட்டப்பட்டு வருகிறது.  2025 ஆம் ஆண்டுக்கான நிதி வசூல்  இயக்கம் நெல்லை மாவட்டம் முழு வதும் கடந்த டிசம்பர் மாதம் துவங்கி யது. பாளையங்கோட்டை பகுதிக்குழு வில் மட்டும் ரூ.6,05,540 நிதி திரட்டப்பட்டது. இது சுமார் 12,100  வீடுகளில் மக்களைச் சந்தித்து திரட்டப் பட்ட நிதியாகும். பாளையங்கோட்டை பகுதிக் குழுவின் திட்டமிடலும் முன் னெடுப்பும் பாராட்டுக்குரியது மட்டு மல்ல, முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. மக்களின் நம்பிக்கையில் கிளைகளின் சாதனை பாளையங்கோட்டை பகுதிக்குழு வில் 11 கட்சிக் கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளும் வசூலில் ஈடு பட்டன. 129 குழுக்கள் வசூலில் பங்கேற் றன. இந்த நிதி திரட்டும் இயக்கம் பல்வேறு அனுபவங்களைத் தந்து உள்ளது. என்ஜிஓ காலனி கிளை ரூ.1.53 லட்சம் நிதி திரட்டியுள்ளது. நடுத்தர மக்கள் நிறைந்த இப்பகுதியில்தான் கட்சி மாவட்டக் குழு அலுவலகமும் அமைந்துள்ளது. இப்பகுதியில் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பல இயக்கங்களை நடத்தியுள்ளது. கட்சியின் அரசியல் தலையீடுகளை வரவேற்று மக்கள் நிதி வழங்கினர். சாதி மறுப்புத் திரு மணத்தைச் சொல்லி நிதி வழங்க மறுத்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதை ஆதரித்து நிதி வழங்கி யவர்களை ஒரு பக்கத்தில் பட்டியலிட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் போராட்டங்களில் முன்னணி சக்தி வி.எம். சத்திரம் கிளை ரூ.1.34 லட்சம்  நிதி திரட்டியுள்ளது. பாளையங் கோட்டை கிளை ரூ.1 லட்சமும், பெண்கள் கிளை ரூ.30,000-ம், சாந்தி  நகர் கிளை ரூ.61,000-ம், எம்.பி. நகர் கிளை ரூ.24,000-ம் நிதி திரட்டியுள்ளன. வி.எம். சத்திரம் பகுதியில் சாலை களைச் சீரமைக்கவும், குடியிருப்புப்  பகுதியில் டாஸ்மாக் கடை அமை வதைத் தடுத்து நிறுத்தவும் மார்க்சி ஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்தது. ஆரோக்கியநாதபுரம் விவசாயிகளின் நில உரிமைக்கான போராட்டத்திலும் கட்சி உடன்நின்றது. எம்.பி. நகர் மற்றும் திம்மராஜ புரம் பகுதியில் குடியிருக்கும் ஆயிரக் கணக்கான மக்களின் பட்டா உரிமைக் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. எம்.பி. நகர் மக்கள்  நல்வாழ்வு சங்கத்துடன் இணைந்து  பல போராட்டங்களை முன்னெடுத்து உள்ளது. 2023 டிசம்பர்  மழை-வெள்ளக் காலங்களில் நிவாரணப்  பணிகளில் கட்சி முன் னின்று செயல்பட்டது. மக்களின் குரலாய் தியாகராஜ நகர் தியாகராஜ நகர் கிளை  ரூ.1.12 லட்சம் நிதி திரட்டி யுள்ளது. இப்பகுதியின் மாமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியே உள்ளது. இப்பகுதி மக்களின் அடிப் படைப் பிரச்சனைகளுக்காக கட்சி இடைவிடாது போராடி வருகிறது.  குறிப்பாக மழைக்காலங்களில் இப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்ப டும். மழைநீர் வடிகால் அமைக்கக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வரு கிறது. தியாகராஜநகர் ரயில்வே பாலத்தைத் திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போரா டியதை மக்கள் அறிவர். தோழர்களின் அயராத உழைப்பு 109 கட்சி உறுப்பினர்களில் 75 பேர்  வசூலில் பங்கேற்றுள்ளனர். வயது முதிர்ந்த, உடல்நலமில்லாத தோழர் களைத் தவிர மற்ற அனைத்துத் தோழர்களும் வசூலில் பங்கேற்றது உற்சாகமளிக்கிறது. மூத்த தோழர்கள் பலரும் வசூலில் பங்கேற்று மற்ற வர்களை ஊக்குவித்தனர். மார்க்சிஸ்ட்  கட்சியின் அரசியல் நிலைபாடுகளை யும், அரசியல் தலையீடுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க நல்ல வாய்ப்பு  எனப் பல தோழர்கள் குறிப்பிட்டனர். கட்சிக்குள்ளும், பொது வெளியிலும் நல்லதொரு அரசியல் உரையாடலை முன்னெடுக்க இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் பயனளித்துள்ளது என்பது மிகையல்ல. கே.ஜி.பாஸ்கரன் மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)