districts

img

சமூக விரோதிகளின் கூடாரமாக வேப்பனப்பள்ளி பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைசி சட்டமன்ற தொகுதியாக இருப்பது வேப்பனபள்ளி.  15,000 மக்கள் தொகை கொண்டது. தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைகளை கொண்ட ஒரே தொகுதி. அதுமட்டுமல்ல பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் எதுவும் இல்லா மல் முழுக்க ஊராட்சிகளை மட்டுமே கொண்டதாகும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்ன டம், உருது மொழிகளையும் பேசக்கூடிய வர்கள் அதிகம் வசிக்கிறார்கள். வேப்பனப் பள்ளியில் இருந்து ஆந்திர எல்லையான குப்பத்திற்கும், கிருஷ்ணகிரியிலிருந்து  வேப்பனபள்ளிக்கும் 15 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுடன் சில தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட காலமாக பேருந்து நிலையம் என்பது கிடையாது. இதனால், அனைத்து பேருந்துகளும் வேப்பனப்பள்ளியில் சாலையில் ஓரத்தில் அணிவகுத்து நிற்கும். வேப்பனப்பள்ளி ஒன்றிய தலைநகராக வும், சட்டமன்றத் தொகுதியின் தலைநகராக வும் மாறியதும் பேருந்து நிலையம் கட்டித் தர கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  பேருந்து நிலையத்திற்கு தனியார் ஒருவர் 2 ஏக்கர் நிலம் இலவசமாக கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டப் பட்டது. 2007 ஆம் ஆண்டில் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சில ஆண்டுகள் மட்டுமே இந்த பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் சாலையில் நிறுத்த தொடங்கி யது இன்று வரைக்கும் அதுவே வழக்கமாக மாற்றிக்கொண்டனர். இதனால்,பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அரசு மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்ளவும் இல்லை. இதன் விளைவு 24 மணி நேரமும் பேருந்து நிலையம் சமூக விரோதிகள் மற்றும் ஆதர வற்றோர் கூடாரமாக மாறிவிட்டது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் கூறுகையில், “பேருந்துகள் நிறுத்தப்படும் சாலையின் அருகில் உள்ளதால் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ள தால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு பேருந்து நிலையத்தை சீர்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள வேப்பனப்பள்ளி - குப்பம் சாலையை சீர்படுத்த வேண்டும்” என்றார்.  ஒய்.சந்திரன்