சென்னை, டிச. 15- சிஐடியு ஆட்டோ சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒரு வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துறைமுகம் பகுதிக்குழு உறுப்பினருமான தோழர் எம்.வெங்கட்ரமணா உடல் நலம் பாதிக்கப்பட்டு வெள்ளியன்று (டிச. 15) காலை காலமானார். இவர் 1970ஆம் ஆண்டு வாக்கில் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எப். தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமை கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற போது, நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் சமூக விரோதிகள் வெங்கட்ரமணா மண்டையை உடைத்து கால்வாயில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டனர். ஒரு நாள் இரவு முழுவதும் கால்வாயில் கிடந்தார். பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடு பட்டார். அப்போது தொழிலாளர்களை திரட்டி ஆட்டோ தொழிற்சங்கத்தை உருவாக்கி னார். தொழிற்சங்க போராட்டத்தின் போதே தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். துறை முகம் பகுதியில் கட்சி வளர்ச்சிக்காக பாடு பட்டவர். இவர் கட்சியின் மூத்த தலைவர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், ஏ.கே.பத்மநாபன், குசேலர், வி.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். கடந்த இரண்டு வருடங்க ளுக்கு முன்பு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மீஞ்சூரில் வசிக்கும் தனது சகோதரர் சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் வெள்ளியன்று காலை அவர் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், இரா.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், துறைமுகம் பகுதிச்செயலாளர் எம்.ஜமாலுதீன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆருள்குமார், வீராச்சாமி, செங்கேணி, குமார், நாராயணன், வடிவேலு, ஆட்டோ சம்மேளன செயல் தலைவர் பாலசுப்பிர மணியன், முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், ஆட்டோ சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அதே பகுதியில் உள்ள மயானத்தில் வெள்ளியன்று மாலை எரியூட்டப்பட்டது. மறைந்த வெங்கட்ரமணா குடும்பத்திற்கு ஆட்டோ சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் ரூ.10000 வழங்கப்பட்டது.