districts

img

வெங்கலில் துணை மின் நிலையம் அமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஆக. 25-

     வெங்கல்  அதைச் சுற்றியுள்ள கிராமங்க ளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது இதனை போக்க இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று (ஆக-24), வெங்கல் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வெங்கல், அத்தங்கி காவனூர், புன்னப்பாக்கம், காதர்வேடு, பாகல்மேடு, செம்பேடு உள்ளிட்டு சுற்றியுள்ள கிராமங்க ளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் நீண்ட காலமாக அடிக்கடி மின் தடை ஏற்படு கிறது இதனால் விவசாயம் கடுமையாக பாதிப்படைகிறது. மேலும் குறைந்த மின்னழுத்தமாக வருவதால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதா கிறது. இதனை போக்க இப்பகுதியில் புதிய தாக துணை மின் நிலையம் அமைக்க போதிய நிதி ஒதுக்கீடும், இடவசதியும் இருந்தும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.

    மேலும் வெங்கலில் ஒரு சிறிய அறை யில் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி கூடுதல் மருத்து வர்களுடன்   24 மணிநேரமும் இயங்க வழிசெய்யவேண்டும், வெங்கல் வழியாக இயங்கி வரும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மற்றும் மாநகர  பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று (ஆக-24),  வெங்கல் பஜாரில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    கரன்ட் சுப்பிரமணி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தை சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வ ராஜ் துவக்கி வைத்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி, த.கன்னியப்பன், ஏ.பத்மா, கிளை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.