வேலூர், செப். 18 - வேலூர் மாவட்டம், காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் எதிரில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 75க்கும் மேற்பட்ட வாடகை கார், வேன் ஓட்டும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு ஸ்டாண்டுக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொது மக்கள் மற்றும் போக்குவரத்து இடை யூறாக இருப்பதாக கூறி அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர்கள் இப்பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு எந்த இடையூறின்றி தொழில் செய்து வருவதாக தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் கூறியதை ஏற்காமல் வேன் ஸ்டாண்டு காலி செய்துத்தரவேண்டும் மேலும் சாலை யோர சிறுகடைகளையும் உடனடி யாக காலிசெய்யவேண்டும் என மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் டாக்சி, வேன் ஒட்டு நர்கள் மற்றும் சாலையோரம் சிறு கடை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தங்கள் வாழ்வாதாரத்திற்கு பிழைப்பு நடத்தும் இவர்களை காலி செய்து விட்டு அருகில் செயல்படும் தனியார் பள்ளிக்கு ஆதர வாக மாநகராட்சி நிர்வாகம் செயல் படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த தொழி லாளர்கள் வேலூர் மாநகராட்சி துணைமேயரிடம் சென்று முறையிட்ட போது அவர் பலகோடி ரூபாய் செலவு செய்து நாங்கள் பாதை அமைத்துள்ளோம். எனவே நீங்கள் வேறு எங்காவது சென்று பிழைப்பு நடத்துங்கள் என உதாசீனம் செய்துள்ளார். இதனையடுத்து வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அராஜகச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதே பகுதியில் வேன் ஓட்டுநர்கள் மற்றும் சாலையோர கடை வைத்திருப்பவர்களை தொடர்ந்து அவர்கள் தங்களது தொழிலை நடத்த அனுமதித்து அவர்களது வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலூர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜி.கேசவன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தும், மாவட்ட தலைவர் டி.முரளி நிறைவு செய்தும் பேசினர். சாலைப்போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரபாகரன், சிஐடியு மாவட்ட இணை செயலாளர் வி.நாகேந்திரன், காட்பாடி கிளை தலைவர் ஆர்.முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசினர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.