districts

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்

வேலூர், ஜூன், 12-

     வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் திங்களன்று (ஜூன் 12) நடை பெற்றது. ஆட்சியர் குமாரவேல் பாண்டி யன் தலைமையில் அதிகாரிகள் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் காட்பாடி செங்குட்டையை சேர்ந்த பாரதி (43). என்பவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கவந்தார்.

    நீண்ட நேரம் வரிசையில் நின்று சென்ற பாரதி, மனு அளிக்க ஆட்சியர் அருகே சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.  

   பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டி யன் அவரிடமிருந்த கோரிக்கை மனுவை ஏற்று, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினார். இதனையடுத்து பாரதி சிகிச்சைக் காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.