மாமல்லபுரம்,ஏப்.2- மாமல்லபுரம் நகருக்கு உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.25. கார்-ரூ.50, பேருந்து , லாரிகளுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் போது ஏற்படும் வாக்குவாதம், மோதல் காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். மாமல்ல புரத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளும் தொடரப்பட்டது. இந்தநிலையில் சனிக்கிழமை முதல் மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாக னங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பய ணிகள் நுழைவு கட்டணமோ, புராதன சின்னங்கள் அருகே வாகன நிறுத்துமிட கட்டணமோ செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.