districts

சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.15.5 லட்சம் அபராதம்

சென்னை,அக்.27-  தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை புதனன்று தொடங்கியது.  புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் புதனன்று  முதல்  நாளில் மட்டும் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிக ளுக்கு ரூ.15.5 லட்சம் அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது. இவர்களில் 1100 பேரிடம் இருந்து உடனடியாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம்  வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் காவலர்கள் அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  சிக்கினர்.   சென்னை மாநகர் முழுவதும் முதல் நாளான அக்26 அன்று மட்டும் 2,500 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள  1,500 பேருக்கு கையில் பணம் இல்லாத தால் அவர்களுக்கு கால அவகாசம் அளிக் கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை களை மீறுவோர் உடனடியாக பணத்தை கட்ட முடியாவிட்டால் அவர்களிடம் அபராத ரசீது தொகையை காவல்துறையினர் கொடுத்து விடுவார்கள். சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு பலர் பயணிப்பார்கள். அது போன்று அறிமுகம் இல்லாத நபர்களை லிப்ட் கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி  வந்தவர்களும் சிக்கினர். சில இடங்களில் அவர்களுக்கும் போலீசார் ரூ.100 அபராதம் விதித்தனர்.