தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்களறு (அக்.1) நடைபெற்ற ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் – 2023’ கருத்தரங்கில் இளநிலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்கப்படுத்துகின்ற வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த முறையில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்த தலா மூன்று மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள், முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு விருதினையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேர.மரு.கே.நாராயணசாமி பதிவாளர் அஸ்வத் நாராயணன், துறைத்தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.