மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட வரதராஜ பெருமாள் நகர் மக்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, பகுதிகுழு உறுப்பினர் கே.வெங்கட்டைய, நகர செயலாளர் என்.ராமமூர்த்தி, பொருளாளர் லிஜய்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.