சென்னை,பிப்.3- 17 நாட்களுக்குப் பின்பு வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. சென்னை அருகே வண்ட லூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வில் பணிபுரியும் அதிகாரி கள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இத னைதொடர்ந்து விலங்கு களின் பாதுகாப்பை கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. மேலும், பூங்காவில் உள்ள 17 வயது ஆன சிறுத்தை ஒன்று உடல்நலக் குறைவால் இறந்தது. இதைத்தொடர்ந்து பூங்கா வில் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்பட 21 பூனை இனங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 11 சிங்கங்கள், 6 புலிகள், 4 சிறுத்தைகள் ஆகிய விலங்குகளுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து வண்டலூர் பூங்கா வியாழக்கிழமை (பிப்.3) முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி பார் வையாளர்கள் அனுமதிக் கப்பட்டனர். முகக் கவசம் அணிதல் சமூக இடைவெ ளியை பின்பற்றுதல் உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் பின்னரே சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் திறந்த வெளியில் உள்ள விலங்குகளை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். காணவே அனுமதிக்கப் பட்டனர். உள் அரங்கில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைக் காண அனு மதி மறுக்கப்பட்டது. 17 நாட்க ளுக்குப் பின்பு இன்று வண்ட லூர் உயிரியல் பூங்கா திறக்க ப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறை வாக காணப்பட்டது.