கடலூர், அக்.5- வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், இந்த விழாவில் வள்ளலார் குறித்த நூலையும் அமைச்சர்கள் வெளி யிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மக்க ளவைத் உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், கூடுதல் ஆணையர் இரா. சுகுமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜே.பரணிதரன், உதவியாளர் சந்திரன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.