districts

img

வி.மருதூர் ஏரிக்கரை வீடுகள் அகற்றம்

விழுப்புரம், செப்.27- விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வி.மருதூர் ஏரி மற்றும் ஏரிக்கரை பகுதியில் 390 வீடுகள், கடைகள் என கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி 20 ஆண்டு களுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு களால் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. அத னால் ஏரிக்கு நீர்வரத்து வருவதும் தடைபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வி.மருதூர் ஏரிக்கரை பகுதியில் சின்னப்பா நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பொக் லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி மக்கள், அங்குள்ள ஒன்று திரண்டு பிரதான சாலையில் மறி யல் செய்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற விழுப்புரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் லட்சு மணன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.  அப்போது பாதிக்கப் பட்டோருக்கு மாற்று இடம் வழங்க விரைவில் நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். அதனையேற்று மறியலை விலக்கி கொண்டனர்.