districts

இருளர் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜுன் 16-

    இருளர் இன பெண்களை பாலியல்  வன்கொடுமை செய்த   குற்றவாளியை   கைது செய்து தண்டிக்கவேண்டும் வேண்டும்  என அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

   திருக்கழுக்குன்றம் வட்டம், அமிஞ்சிகரை  இருளர் குடியிருப்பை சேர்ந்தவர்  விஜயபாபு இவரது மகள் நாகவள்ளி (வயது 22) பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜூ,  என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

   இந்நிலையில் திருப்போரூர் அடுத்த  தையூர்  பாலம்மாள் நகர் பாலு என்பவர்    கடந்த 2021 ஆம் ஆண்டில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடி இருளர்    சமூகத்தைச் சேர்ந்த 10 பெண்கள், 10 ஆண்கள் என 20 நபர்களுக்கு ரூ.15,000    முன்பணம் கொடுத்து மரம்  வெட்டும்  வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

   ஒரு நபருக்கு தினந்தோறும் கூலி  ரூ 100 கொடுத்து காலை  6 மணி முதல்  மாலை 6 மணிவரை வேலை வாங்கி வந்துள்ளார். அவர்களுக்கு தேவை யான உணவு,  குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் கூட  செய்து தராமல் தங்க வைத்துள்ளார்.

     இந்நிலையில் நாகவள்ளி மற்றும்  அவருடன் இருந்த சில பெண்களிடம்   பாலு தகாதமுறையில் நடந்து கொண்டதாகவும் அதனை எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களை வேலையை விட்டு விரட்டிவிடுவதாகவும் கூலி  கொடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் நாகவள்ளியை  வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.  இதனைத் தொடர்ந்து நாகவள்ளி  உறவினர்கள் மூலம் செங்கல்பட்டு கோட்டாட்சியருக்கு தகவல் கொடுத்ததின் பேரில்  கடந்த ஏப்ரல் மாதம் கொத்தடிமைகளாக இருந்த 20 நபர்களும் மீட்கப்பட்டனர்.  

    கொத்தடிமையிலிருந்து மீட்கப் பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களிடம்   பாலியல் வன்கொடுமை  குறித்து காவல்துறை விசாரிக்க வில்லை. இந்நிலையில் பாலியல் குற்றவாளி பாலு தன் மீது கொடுக் கப்பட்டவழக்கை திரும்பப்பெற வேண்டும் என பாதிக்கப்பட்ட நாக வள்ளியையும் அவரது  குடும்பத்தின ரையும் மிரட்டி வருகிறார். வாபஸ்  பெறாவிட்டால் கொலை செய்துவிடு வதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில்   கடந்த ஜுன் 3 அன்று காலை சுமார் 11.30 மணியளவில் திருப்போரூர் அருகாமையில் உள்ள சித்தி வீட்டிற்கு சென்ற நாகவள்ளியை அங்கு வந்த  பாலு கண்மூடித்தனமாக தாக்கி யுள்ளார். அருகில் உள்ள சவுக்கு தோப்பிற்குள் இழுத்துச்சென்று கொலை வெறியுடன்  தாக்கியுள்ளார். வலிதாங்கமுடியாமல் கூச்சலிட்ட நாகவள்ளியை அக்கம் பக்கத்தினர்  மீட்டுள்ளனர். பின்னர்  நாகவள்ளி அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளார்.

    இதையடுத்து பாலியல் வன் கொடுமை செய்த பாலு மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேளம்பாக்கம் காவல் நிலையத்தில்   மாதர்சங்கத்தின் உதவியுடன் புகார்  அளிக்கப்பட்டது. மேலும்  நடவடிக் கையை துரிதப்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ஜெயந்தி மாவட்ட  காவல் கண்காணிப்பாளரை  சந்தித்து  முறையிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து இருளர் பெண்களை கொத்தடிமையாக வைத்து பாலியல் வல்லுறவு செய்துவந்த பாலு மீது மாதர் சங்கத்தின் தலையீட்டினால்  தற்போது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்   கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றவாளி பாலு தண்டிக்கப்பட வேண்டும் எனவும்  பாதிக்கப்பட்ட நாகவள்ளி உள்ளிட்ட இருளர் இன பெண்களுக்கு பாதுகாப்பு  மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட   செயலாளர் ஜி.ஜெயந்தி வலியுறுத்தி யுள்ளார்.