மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உளுந்தூர்பேட்டை நகராட்சி 20ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.தேவிக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.பிரமிளா, மாவட்டச் செயலாளர் இ.அலமேலு, துணைத் தலைவர் ஏ.சக்தி, நகர செயலாளர் வீ.சந்திரா உள்ளிட்ட பலர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் 44ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.எஸ்.வெண்ணிலாவையும், 37ஆவது வார்டில் போட்டியிடும் எம்.ரவியையும் ஆதரித்து மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், கோவிந்தசாமி, சுரேஷ், நஞ்சுண்டன், பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகராட்சி 23ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஜி.யுவராஜ் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், வி.குபேந்திரன், நகரச் செயலாளர் பி.காத்தவராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகராட்சி 36ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் இன்பவல்லியை ஆதரித்து மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சிலம்பரசன் ஆகியோர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் மாநகராட்சி 21ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவி ஆனந்தை ஆதரித்து கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், திமுக வார்டு செயலாளர் மணி மஞ்சு, காங்கிரஸ் வார்டு செயலாளர் பாவாடை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி வாசு, மதிமுக வட்டச் செயலாளர் கோதண்டராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 36ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாலதி சுப்புராயனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மருதவாணன், ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர்கள் டி.புருஷோத்தமன், என.காசிநாதன், ஐ.மதியழகன் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, கைத்தறி சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ஆளவந்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் கேசவா நகர் பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் இளைஞர்களிடம் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அருள்மூர்த்தி, காளிதாஸ், எம்.சி.சந்திரன், எம்.எஸ்.ரமேஷ், புண்ணியகோட்டி, சசி, சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர், நிர்வாகிகள் பாரி,சிவராமன், பெ.,அரிதாசு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி இரா.சரவணன், மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.