districts

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 சிபிஎம் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி 3ஆவது வார்டில் போட்டியிடும்  ராஜேஸ்வரி வேல்முருகன், புவனகிரி பேரூராட்சி 3ஆவது வார்டில் போட்டியிடும் செல்வி சதானந்தம், 16ஆவது வார்டில் போட்டியிடும் கார்த்திகேயன், 6ஆவது வார்டில் போட்டியிடும் இளையநிலா சுதாகர், 18ஆவது வார்டில் போட்டியிடும் வள்ளிராஜன் ஆகியோரை ஆதரித்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பனைச்செல்வம். ஒன்றியச் செயலாளர்கள் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு 30ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் டி.சந்திரன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ரகுபதி, எஸ்.கிட்டு, தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், வட்டக்குழு உறுப்பினர்கள் கோதண்டராமன், கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் மாநகராட்சி 37ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.ரவியை ஆதரித்து மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஸ்ரீதர், நாராயணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், கோவிந்தசாமி, சுரேஷ், நஞ்சுண்டன், பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

ராணிப்பேட்டை நகராட்சி 4ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தா.வெங்கடேசன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எல்சி.மணி, என்.ரமேஷ், ஆர்.திலகா, வாலாஜா தாலுக்கா செயலாளர் ஆர்.மணிகண்டன், பழனி, தனுஷ்கோடி, சரவணன், ரஞ்சித், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி வார்டு 1இல் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மா.கவுதம் முத்து வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். காந்தி நகரில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், நகர செயலாளர் பி.கே.முருகன், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கே.டி.ராமசாமி, நிர்வாகிகள் பி.என்.அண்ணாதுரை, திருஞானம், வரதராஜன், ஏழுமலை, குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எல்ஐசி ராணிப்பேட்டை கிளை முன்னாள் செயலாளரும், வேலூர் கோட்ட எல்ஐசி விற்பனை பிரிவு மேலாளருமான சதக்கத்துல்லா ஞாயிறன்று (பிப். 13) காலமானார். அதையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு ராணிப்பேட்டை எல்ஐசி கிளை அலுவலகத்தில் முகவர் சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கோட்ட பொதுச் செயலாளர் தா.வெங்கடேசன், கிளை மேலாளர் முத்தையன், உதவி கிளை மேலாளர் குமரேசன், சங்க நிர்வாகிகள் செல்வம், ஏழுமலை, மூர்த்தி, முருகானந்தம், வினோத், சுரேஷ் (ஊழியர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.