சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடி 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் புதுச்சேரி நீதிமன்ற வளாகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சிங்காரவேலர் பெயரில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது . சிஐடியு பிரதேச தலைவர் முருகன் தலைமையில் நடந்த நிகழ்வில் நிர்வாகிகள் சீனிவாசன், ராமசாமி, கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, கலியன், மதிவாணன், ரவிச்சந்திரன், குணசேகரன், வடிவேல், விஜயகுமார்,வீர மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேதின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் எழுச்சியோடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.