புதுச்சேரி, ஜூலை1- போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த உப்பனாறு பாலத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று வாலி பர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் கௌசிகன்,செயலாளர் சஞ்சை சேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநி லத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரோனா தொற்று காலத்திற்கு பின்பு சுற்றுலா பயணிகள், மதுப்பிரியர் என அனைவருக்கும் இருசக்கர வாகனம் வாடகைக்கு கிடைப்பது கூடுதல் வசதியாக இருப்ப தால் புதுச்சேரியை நோக்கி வருகை அதி கரித்துள்ளது. தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாகனங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. போக்குவரத்து குறித்து எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் போக்குவரத்து நெரிசலில் மக்கள் படும் வேதனைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு வீதிகளில் வாகன நிறுத்த கட்டணம், வாகன சான்றிதழ் சரிபார்ப்பு என்ற பெயரில் அபராதம் விதிப்பது என மக்களிடம் பணத்தை வசூலிக்க மட்டும் காவல்துறையையும், புதுச்சேரி நகராட்சி களையும் பயன்படுத்தி வருகிறது என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு. புதுச்சேரி அரசு துறைகளின் மூலம் மக்க ளுக்கு எந்தவித ஆக்கபூர்வமான செயல்பாடு களையும் செயல்படுத்தாத ஆளும் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. 2009ஆம் ஆண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக உப்ப னாறு கால்வாயின் மேல் பாலம் அமைக்கும் பணி ரூ. 30 கோடி செலவில் துவங்கப்பட்டு 95 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படை எழுத்து தேர்விற்கு இளை ஞர்கள் காலதாமதமாக சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுவதற்கு போக்கு வரத்து நெரிசலும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இவ்வாறு போக்குவரத்து நெரிசல் அதி கரித்து வரும் சூழலில் அனைத்து தரப்பு மக்க ளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்ற னர். எனவே கட்டிமுடிக்கப்பட்ட உப்ப னாறு பாலத்தை உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வும், போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த அதிக அடர்த்தியான சாலைகளை கண்டறிந்து மாற்று திட்டங்களை செயல் படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.