கிருஷ்ணகிரி,பிப்.20- பருவம் தவறி பூத்துக் குலுங்கும் மாம்பூக்கள் காரணமாக மா விளைச்சல் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். காவேரிப்பட்டினம் சூளகிரி போச்சம்பள்ளி, அரசம்பட்டி, ஊத்தங் கரை பகுதிகளில் ஆயி ரக்கணக்கான ஏக்கர்களில் நீலம், பீதர்பசந்த், பெங்க ளூராமா உள்ளிட்ட பல வகையான மா வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம் பகுதி களில் மிக அதிகமான விளைச்சல் உள்ளது. மா விளைச்சலில் காய்கறிகள் மலர் சாகுபடி போலவே கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாபூக்கள் பூக்கும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறிக்கப்பட்டு விற்பனைக்கு பழங்கள் தயாராகிவிடும் இந்நிலையில் இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக தற்பொழுதுதான் மாம்பூக்கள் அமோகமாக பூத்துள்ளது ஆனால் பணிக் காலம் முடிந்து வெயில் காலம் துவங்குவதால் பூக்கள் அதிகமாக உதிர்ந்து வருகிறது. மார்ச்,ஏப்ரல் மாதங்க ளில் வெயில் கடுமையால் பூக்கள் உதிர்ந்து வருகிறது. இதனால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. பருவ மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் வேதனை யுடன் உள்ளனர்.