செங்கல்பட்டு, ஜன.13- செங்கல்பட்டில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ரயில்வே சுரங்கப் பாதையை உடனடியாக திறக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றது. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் இரு சர்வீஸ் சாலைகளையும் பயன் படுத்துவதற்கு ஏதுவாக சுரங்கப் பாதையை சீரமைத்து வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுத்திட வேண் டும், திருக்கழுக்குன்றம் சாலையை பயன்படுத்தும் ரயில் பயணிகளால் செங்கல்பட்டு நகரில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த கொளவாய் ஏரியை ஒட்டிய சாலையை அகலப்படுத்தி ரயில் நிலையத்தின் 8 வது நடைமேடைக்கு இணையாக ஏரியில் நீர் கொள்ளளவு பாதிக்காத வகையில் உயரடுக்கு வாகன நிறுத் தம், டிக்கெட் கவுண்டர் ஏற்படுத்திட வேண்டும், திருக்கழுக்குன்றம் மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் விபத்து ஏற்படாத வாறு போக்குவரத்து காவலர்கள் நியமித்தும், தடுப்புகள் அமைத்தும் நடவடிக்கை எடுத்திட வேண்டும், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்தை இணைக் கும் வகையில் ஸ்கை வாக் அமைத்துத் திட வேண்டும், மேலமையூர் ஊராட்சி 1, 2, வார்டுகளில் மிகவும் மோசமடைந் துள்ள தெருச் சாலைகள் மற்றும் அம்மணம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கான இணைப்புச் சாலையை செப்பனிட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வல்லம் ரயில்வே மேம்பாலம் அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கை பகுதிக் குழு உறுப்பனிர் எம்.ரவி தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.பீமாராவ் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கிவைத்தார். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன்,பகுதி செயலாளர் கே.வேலன். மாவட்டக் குழு உறுப்பினர் கள் எம்.அழகேசன், எம்.கலைச் செல்வி, பகுதிக்குழு உறுப்பினர்கள் என்.அன்பு, ர.பரணிவர்மன், இ.யோபு ராஜ், ரா.சதீஷ் உள்ளிட்ட பலர் பேசி னர். தொடர் போராட்டம் இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா கூறுகையில், செங்கல்பட்டு மாவட்ட மாக உருவாக்கப்பட்டு பல ஆண்டு கள் ஆகியும் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அரசு நிர்வாகம் எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததாக தெரிய வில்லை. குறிப்பாக மாவட்ட தலை நகரின் வளர்ச்சி குறித்து மக்களிடம் கருத்து கேட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று செங்கல்பட்டு நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிகளில் குடிதண்ணீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் குடிதண்ணீர் பிரச்ச னைக்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அதே போன்று ராட்டிணங் கினறு பகுதியில் கிடப்பில் போடப் பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிப்ரவரி இறுதி வாரத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார். சென்னையில் போராட்டம் செங்கல்பட்டு ரயில்நிலையத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ரயில்வே சுரங்கப்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகருக்குள் செல்ல மேம்பாலத்தை பயன்படுத்தி சுற்றி வர வேண்டி யுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியை போதை ஆசாமிகள் ஆக்கிர மித்துள்ள தால் பெண்களும் பொதுமக்களும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ஸ்கை வாக் அமைத்திட வேண்டும், சாலை களை சீரமைத்திட வேண்டும், பாலாற்று குடிதண்ணீர் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றித்தர வேண்டும். இல்லை யெனில். மக்களை திரட்டி சென்னை யில் உள்ள துறைவாரி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.