பம்புசெட் வழங்கி வரும் இலவச மின்சாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் வேலூர் வட்டத்தில் கணியம்பாடி, ஊசூர், குடியாத்தம் வட்டத்தில் மேல்செட்டிகுப்பம் கிராமங்களில் நடைபெற்றது. சி.எம்.நடராஜன், டி.வசந்தகுமார், எம்.உஷா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், பொருளாளர் சி.எஸ்.மகாலிங்கம் உள்ளிட்டட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் வாணியம்பாடி மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பும் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.