districts

img

புதிய ஆலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கே வேலை ஒன்றிய மாநாடு கோரிக்கை

கள்ளக்குறிச்சி, அக்.20 – உளுந்தூர்பேட்டை சாத்தனூரில் அமைய உள்ள புதிய தொழிற் சாலையில் உள்ளூர் கிராம இளைஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11-வது ஒன்றிய மாநாட்டில் செங்கொடியை பி. தணிகாசலம் ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.சேகர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு எம்.செந்தில் மாநாட்டை துவக்கி வைத்து பேசினர். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனுவாசன் சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை வி. மார்த்தாண்டன் தாக்கல் செய்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு எம்.கே.பூவராகவன் நிறை உரையாற்றினார். ஒன்றிக்குழுதேர்வு 11 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு செயலாளராக எடைக்கல் வி.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் பாலி புது குடியிருப்பு பகுதிக்கு நகர பேருந்து புதிதாக இயக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பாலில் புது குடியிருப்பு வரை உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும், கிளியூர் முதல் நெய்வனை வரை உள்ள தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.