districts

மழை - வெள்ளம் பாதித்த வட சென்னையில் ஒன்றியக்குழு ஆய்வு

சென்னை, டிச. 12-  வட சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதி களில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் ஒன்றிய அரசு உதவி செய்யும் என்று தெரிவித்தனர். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள  சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணை யத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலை மையில் 6 பேர் கொண்ட  மத்திய குழு அமைக்கப் பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை (டிச. 11) இரவு தில்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர், செவ்வாயன்று (டிச.12) சென்னை தலைமை  செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உடன் ஆலோசனை நடத்தி னர். பின்னர் இரண்டு குழுக்க ளாக பிரிந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வேளாண் நலத் துறை இணை இயக்குநர் சிவாகர், எரிசக்தி துறை துணை இயக்குநர் பவ்யா  பாண்டே, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறி யாளர் விஜயகுமார் ஆகியோர் வடசென்னை யில் ஆய்வு மேற்கொண்ட னர். சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று  வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளைக் காட்டி  விவரித்தனர். புகைப்படங் கள் மூலம் வெள்ள பாதிப் பின் தீவிரத்தை மத்தியக் குழுவிடம் விவரித்தனர். பட்டாளம் டிமெல்லோஸ்  சாலை, ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங் களை ஆய்வு செய்தனர். பட்டாளத்தில் வெள்ளம் சூழ்ந்தது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள புகைப் படங்களை பார்வை யிட்டனர். அடுத்ததாக புளியந்தோப்பு நெடுஞ் சாலை, சிவராவ் சாலை, மோதிலார் தெரு, ஸ்டீபன் சன் பாலம் ஆகிய பகுதி களில் ஆய்வு மேற்கொண்ட னர். பின்னர் வடபெரும் பாக்கம் கால்வாய், வடபெரும்பாக்கம் சாலை, கொசப்பூர், குளக்கரை, பர்மா நகர் இருளர் காலனி,  மணலி திடீர் நகர், பாலசுப் பிரமணியம் நகர், எம்ஜிஆர். தெரு, பலராமன் தெரு, சிபிசிஎல் நகர், கலைஞர்  நகர், எம்எப்எல் எதிரில்,  ஜகதாம்பாள் நகர், திரு வொற்றியூர் - மணலி பிர தான சாலை, சடையன் குப்பம், நெட்டுகுப்பம் முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற் கொண்டனர்.   அப்போது பொதுமக்கள் தாங்கள் பட்ட துயரங்களையும், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தது குறித்து கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர்.