districts

img

நீருக்கடியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை, ஏப்.11- சென்னை ஸ்கூபா டைவர்ஸ் நீருக்கடியில் தனித்துவ மான முறையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை நீலாங்கரையில் ஆறு ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில், அறுபது அடி ஆழ நீருக்கு அடியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) வாக்குப்பதிவு  விழிப்புணர்வு பதாகைகளுடன் மாதிரி மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை ஏந்தி கடலில் மூழ்கினர். “எனது  வாக்கின் வலிமை எனக்குத் தெரியும்” மற்றும் “எனது நாடு, என் வாக்கு” என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது. ஓட்டு போடுவது நமது கடமையும் உரிமையும் என்பதை  உணர்த்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்ததாக டைவர்ஸ் ஒருவர் தெரிவித்தார்.