திருவள்ளூர், அக். 6- பூந்தமல்லி, திருநின்ற வூர் ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபிஎம் பூந்த மல்லி பகுதி மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சிபிஎம் பூந்தமல்லி பகுதி 9வது மாநாடு ஞாயி றன்று (அக் 6), திருநின்றவூரில் தோழர் சீத்தா ராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடை பெற்றது. மாநாட்டில் பி.என்.விஜயக்குமார் தலைமை தாங்கி னார். மூத்த உறுப்பினர் எம்.ராமசாமி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தேவேந்திரன் வரவேற்றார்.மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பச்சையம்மாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சம்பத், இ.மோகனா, சி.பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். செயலாளர் ஜெ. ராபர்ட்எபிநேசர் வேலை அறிக்கையை முன்வைத்தார். பகுதி குழு உறுப்பினர்கள் அறிவழகன், பௌர்ணமி, சகிலா, கணேசன், ஜெயராமன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். பகுதி குழு உறுப்பினர் கி.பாரி நன்றி கூறி னார். பெரியார் நகர், முத்தமிழ் நகர், திரு வேங்கடபுரம், சுதேசி நகர்களில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும், பூந்தமல்லி மற்றும் திருநின்றவூர் ஆகிய நகராட்சிகளில் மகளிர் அரசு கல்லூரிகளை துவங்க வேண்டும், பூந்தமல்லியை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பெரியார் நகர் ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பகுதிக்குழுதேர்வு 10 பேர் கொண்ட பூந்தமல்லி பகுதி குழுவில் செயலாளராக ஏ.பச்சையம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் பெண் செயலாளர் பச்சையம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.