சென்னை, பிப். 16 – 89 மாத கால வழங்கப் படாமல் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை கோட்ட 6வது ஆண்டு பேரவை பிப்.14-15 தேதி களில் அய்யப்பன்தாங் கலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அகவிலைப்படி உள்ளிட்ட பிரச்சனைகளில் நீதிமன்ற தீர்ப்புகளின் மீதான மேல்முறையீடுகளை திரும்ப பெற வேண்டும், 2021 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் எம்.நீலமேகம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ராமானுஜபிரசாத் வரவேற்க, அஞ்சலி தீர்மானத்தை இணைச் செயலாளர் கே.தாமோத ரன் வாசித்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் கே.வீரராகவ ன், வரவு செலவு அறிக் கையை பொருளாளர் ஏ.முத்துக்குமார் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செய லாளர் வி.தயானந்தம், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், நல அமைப்பின் மாநிலத் தலைவர் கே.கிருஷ்ணன், பொதுச்செயலாளர் கே.கர்சன், துணைப் பொதுச் செயலாளர்கள் பி.செல் வராஜ், எம்.சண்முகம், துணைத்தலைவர்கள் எம்.சந்திரன், ஏ.ரைமண்ட், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் கோட்டத் தலைவராக டி.குருசாமி, பொதுச்செயலாளராக கே.வீரராகவன், பொருளா ளராக ஆதிமூலம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.