மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிபந்தனையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி செங்கல்பட்டில் திங்களன்று (நவ.20) மாநிலம் முழுவதும் வருவாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் வெள்ளிகண்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாவட்ட செயலாளர் தாட்சாயணி, மாவட்ட துணைத் தலைவர் கே.லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.