சிதம்பரம், அக். 29- சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி யின்றி மேற்கொள்ளப்படும் கட்டமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் சார்பில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் தலைமை தாங்கினார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சி யின் மாவட்டக்குழு மற்றும் நகர்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கோவில் நிர்வாகம் அரசின் எவ்வித அனுமதி இன்றி யும் ஆகம விதிகளுக்கு எதிராகவும் கோவி லின் உள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இக்கோயில் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். இது பொதுக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்த மல்ல. தீட்சிதர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோயிலை நிர்வகித்து வரலாம் நிர்வாகத்தில் தவறுகள் ஏதேனும் நடைபெற்றால் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.