districts

img

மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி

திருவள்ளூர், மே 2- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் இம்மானுவேல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.  கோடை விடுமுறை தொடங்கிய நிலை யில் தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக துப்புரவு  பணியாளர்கள் திங்களன்று (மே1) வரவ ழைக்கப்பட்டனர். மீஞ்சூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர் கோவிந்தன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுப்புராயலு ஆகிய இருவரும் அப்பள்ளியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த உள்ளே இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் நீண்ட நேரமாக வெளியே வராதால் மீஞ்சூர் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து  வடசென்னை அனல் மின் நிலைய தீய ணைப்பு வீரர்கள் தொட்டியில் மயங்கிய  நிலையில் இருந்த துப்புரவு தொழிலாளர் களை மீட்கும் பணியில்  ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டியில் இறங்கி மயங்கிய நிலை யில் இருந்த தொழிலாளர்களை ஒருவர்  பின் ஒருவராக கயிறு கட்டி மேலே சடலமாக  மீட்டனர். தொடர்ந்து இருவரது உடல்களை யும் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். செவ்வாயன்று (மே-2) உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

 தாளாளர் கைது

இந்த சம்பவத்தை தொடர்ந்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமை களை மீட்டெடுத்த தினமான மே 1 அன்று  தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்று வதை விடுத்து இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டி  மரணங்களை தடுக்க சென்னை அண்ணா  பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியி யல் துறையை உருவாக்க வேண்டும், ஓமோ  செப் வாங்கி அனைத்து பேரூராட்சி, ஊராட்சிகளில் அந்த கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதற்காக அரசு நிதி ஒதுக்க வேண்டும்  என்று  பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் ஒன்றிய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநிலத் பொதுச் செயலாளர்  கே.சாமுவேல்ராஜ் கேட்டுக் கொண்டுள் ளார்.

குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும் அரசு வேலையும் வழங்கப்படும்  என பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிய ரசு தெரிவித்தார். மறைந்த கோவிந்தன், சுப்புராயலு உடல்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால்,   சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன்,  உள்ளாட்சி ஊழியர்  சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம்,  மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல், பொரு ளாளர் குமரவேல், முன்னணியின் மாவட்ட  செயலாளர் த.கன்னியப்பன், சிஐடியு மாவட்ட துணை நிர்வாகிகள் என்.ரமேஷ் குமார், எஸ். நரேஷ்குமார், கே.வெங்கடே சன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  ஏ.பத்மா, பொன்னேரி பகுதி தலைவர் வி.லாவண்யா, விதொச மாவட்டப் பொரு ளாளர் கங்காதரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.