districts

img

கவுன்சிலரின் சாதிய வன்ம பேச்சு?

கடலூர்,ஜன.12- கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா  தலைமையில்  ஜன.12 அன்று  நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையர் காந்தி ராஜ், அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ் தாய் வாழ்த்து இல்லாமல் துவங்கிய இந்த கூட்டத்தில் தீண்டாமை  ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் கோரிக் கையை ஏற்று தமிழ் தாய் வாழ்த்து பாடினர். பிறகு, முறைப்படி கூட்டம் துவங்கியது. 25 வார்டு திமுக கவுன்சிலர் சசிகலா, “தனது வார்டில் எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டார். திமுக கவுன்சிலர்கள்  10 பேர் மேயருக்கு எதிராக தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மேயர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு  கவுன்சிலர்களுக்கு  இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதற்கிடையில், தன்னை  தொழில் மற்றும் சாதி ரீதியாக கேவலப்படுத்தும் 45 வார்டு கவுன்சிலர் விஜய லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி   44 வார்டு கவுன்சிலர் கீர்த்தனா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பேசிய மேயர், “சாதி ரீதியாக பேசிய மாமன்ற உறுப்பினர்  மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றார். ஆனால், அதை  அந்த உறுப்பினர் ஏற்க வில்லை. இதனால் மாமன்ற  கூட்டத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. . இதைத் தொடர்ந்து, சம்பவத்திற்கு மேயர்  சுந்தரி ராஜா வருத்தம் தெரி வித்தார். பிறகு, கூட்டத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகும் பிரச்சனை ஓயவில்லை. சாதி ரீதியாக பேசிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  கீர்த்தனா மற்றும் திமுக  கவுன்சிலர்கள் 8 பேர்  கூட்ட அரங்கில் தர்ணா  போராட்டத்தில்  ஈடுபட்ட னர். பிறகு, மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ், துணை மேயர் தாமரைச் செல்வன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் தற்காலிகமாக பிரச்சனை ஓய்ந்துள்ளது.