districts

img

விழுப்புரம் ஆட்சியர் அலுவலத்தில் பழங்குடி இருளர் பெண் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்,ஜன.3- இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு இடைத்தரகர் பணம் கேட்டதால் மனமுடைந்த இரு ளர் பெண் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்குட்பட்டது ஜம்போதி ஊராட்சிமன்றம். இந்த ஊராசிமன்றத்திலுள்ள கலர்ப்பாளை யம் பழங்குடி இருளர் பகுதியில் வசித்து வரும் முருகன் மனைவி கன்னியம்மாள். இவருக்கு அரசு சார்பில், இலவச வீட்டு மனைப் பட்டா கிடைத்துள்ளது. இந்த மனைப்பட்டாவை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரடியாக கன்னியம்மாளி டம் வழங்காமல் இடைத்தரகர் மூலம் இடம் வழங்கவுள்ளனர்.  இதனைத்தொடர்ந்து கன்னியம்மாளிடம், அந்த இடத்திற்கான அரசு மதிப்பீட்டு தொகையை வழங்கினால் மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என இடைத்தரகர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையம், மாவட்ட காவல்துறை மற்றும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அந்த பெண், மண்ணெண்ணெய் கேனு டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். காவல்துறையினரின் கெடுபிடியால் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு, தீக்குளிக்க முயற்சித்தார்.  அப்போது பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வந்த மாவட்ட ஆட்சி யர் வளாகத்தில் காவலர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை காப்பாற்றினர். தொடர்ந்து அவரி டம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாவுக்கு இடைத் தரர்கள் மூலம் அரசு அதிகாரிகள் பணம் கேட்டு தொல்லைகள் கொடுத்த விவரத்தை தெரித்துள்ளார். இலவச மனைப்பட்டா கிடைக்காமல் பழங்குடி இருளர் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சித் பெருந்திட்ட வளாகம் வாயில் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.