மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெள்ளியன்று (ஆக.9) புஷ்பாநகரில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திர பாரதி தலைமையில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். வி.வேணு கோபாலன் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினார்.