சென்னை, டிச. 26 - வேலைக்கு வரும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் பணி வழங்க கோரி திங்களன்று (டிச.26) பணிமனைகளில் போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், வேலைக்கு வந்தாலும் நிர்வாகம் பணி வழங்கு வதில்லை. இதனால் அந்த நாள் தொழிலாளர்களுக்கு விடுப்பு நாளாக கருதப்படு கிறது. எனவே, வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி வருகை பதிவை உறுதி செய்ய வேண்டும் என்று அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் வலி யுறுத்தி வருகிறது. இதனை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனைக் கண்டித்து திங்களன்று (டிச.26) அதி காலை 5 மணிக்கு பணிமனை களில் சிஐடியு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு கடன் சங்க மனுவில் நிர்வாகம் கையெழுத்திட மறுக்க கூடாது, காலி பணி யிடங்களை பூர்த்தி செய்யா மல் தொழிலாளிக்கு ஒருநாள் விடுப்பு போட்டு சம்பளத்தை பிடிக்ககூடாது, நேர அட்டவணையில் உள்ளபடி ஒவ்வொரு நடைக்கும் ஓய்வு நேரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களையும் முழக்கங்களாக எழுப்பினர். இதன்காரணமாக பணி மனைகளில் பேருந்து இயக்கம் ஒரு மணி நேரம் தடைபட்டது. இதனால் தொழிலாளர்களுக்கும், தொமுச-வினருக்கும் இடையே வாக்குவாதமும், ஒரு சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.