districts

img

அனைவருக்கும் ஊதியம், ஓய்வூதியம் போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை

கடலூர்,ஜூலை 27-

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.  

    மண்டலத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், ராமமூர்த்தி, பொருளாளர் அரும்பாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.