districts

சென்னை முக்கிய செய்திகள்

ஆம்னி பேருந்துகள் தொடர்பாக  பயணிகள் புகார் அளிப்பதில்லையாம் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார்

சென்னை, அக்.24- ஆம்னி பேருந்து கட்டண உயர்வு  குறித்து பயணிகள் புகார் அ ளிப்ப தில்லை என்றும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுக் குள் வைப்பது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் அமைச்சர் சிவ சங்கர், ஆம்னி பேருந்து உரிமையாளர் களுடன்  ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, கூடுதல் ஆணையர் சிவகுமரன், இணை  ஆணையர் செந்தில்நாதன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் அன்பழகன், திருஞானம், அப்சல், முத்துக்குமார், மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: “தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்வது மட்டுமில்லாமல், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் சுமூக  பயணம் மேற்கொள்ளும் வகையில்  ஆம்னி பேருந்து உரிமையாளர்க ளுடன் ஆலோசனை நடத்த முதல்வர்  உத்தரவிட்டார். கடந்த ஆண்டைப்  போலவே கட்டண உயர்வின்றி, தீபா வளியையொட்டி பொதுமக்கள் பயணம் செய்ய உதவுவதாக உரிமை யாளர்கள் உறுதியளித்துள்ளனர். அதேநேரம், கடந்த ஆண்டை விட முன்பதிவு குறைந்திருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் போது, போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் காவல்துறை மூலமாகவும், சுங்கச்சாவடிகளில் தாம தம் ஏற்படாத வண்ணம் கட்டணமின்றி செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சுங்கச்சாவடியை பொறுத்தவரை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி களுடன் தலைமைச் செயலர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த வகையில் பேருந்துகள் தீபாவளிக்கு முன் செல்லும் போதும் பண்டிகை முடிந்து வரும்போதும் நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கும் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவதில்லை. சங்கத்தின் தொடர்பு இல்லாமல், புதிதாக பேருந்து களை இயக்குவோர் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பண்டிகை காலத்தில்கூடுதல் பேருந்துகள் இயக்குவதோடு, தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையி லும் இயக்குகிறோம். இதைத் தவிர,  சொகுசு பயணத்துக்காக ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் நாடு கின்றனர். அவர்கள் புகாரளிப்ப தில்லை. அனைத்து செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்க ளின் அனைத்து பிரச்சினையையும் சேர்த்து கவனிக்க வேண்டிய இடத்தில்  தான் அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு அதிகரித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

சாலை விபத்தில் பாட்டி, பேத்தி பலி

அம்பத்தூர், அக். 24- மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா (45). இவர், தனது மகள்கள் மற்றும் பேத்தி  விரோனிக்கா 5) ஆகியோருடன் தாம்பரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் சென்று விட்டு, மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.  ஆட்டோ தாம்பரம் புழல் 200 அடி புறவழிச்சாலையில் போரூர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த வெண்ணிலா உட்பட அனை வரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்த வர்கள் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 3 பேர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு  பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதி நவீன செல்பேசி விரைவில் இந்தியாவில் அறிமுகம் 

சென்னை, அக்.23- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ, அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோடி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஐக்யூஓஓ 13 சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட்  செயலியுடன் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வுள்ளது. இன்று வரை அதன் உயர்செயல்திறன் கொண்ட முதன்மை சாதனங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் புதிய ஸ்னாப்டிராகன் குவால்காம் உடனான ஐக்யூஓஓ-ன் உக்தி சார் ஒத்துழைப்பு தொடர்கிறது.

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 

அம்பத்தூர், அக். 24 - பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.1.66  லட்சம் கைப்பற்றிய போது ஊழியருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். திருவள்ளூர் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் சங்கர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வி மற்றும் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென உள்ளே நுழைந்து, நகராட்சி அலுவலக பிரதான கேட்டை பூட்டினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் அறை, பொறியாளர் அறை, மேலாளர் அறை, வருவாய் துறை  அறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும்  சோதனை நடத்தினர். அப்போது நகரமைப்பு  பிரிவு அறையில் கணக்கில் வராத ஒரு  லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி னர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளநிலை உதவியாளர் சரத் என்பவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவருக்கு முதலு தவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சரத்  சகஜ நிலைக்கு வந்தார் இந்த சோதனை வியாழக்கிழமை அதிகாலை 3 மணி வரை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நாய்க்கடிக்கு ஊசிபோட்டுவிட்டு ஊர் திரும்ப முயன்றவர் விபத்தில் பலி

\செங்கல்பட்டு, அக்,24- திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த  அங்குசாமி என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (எ) கோபி(30).   இவரது தாயார் அஞ்சலை. இந்நிலையில், வீட்டின் அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர்  தாய் மற்றும்  மகனை நாய்கடித்ததாக தெரிகிறது. இதனால், திருக்கழுக் குன்றம் அரசு மருத்துவமனையில் புதனன்று  சிகிச்சை  பெற்றுக்கொண்டு, நாய்க்கடிக்கான ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் மீண்டும் ஊர் திரும்புவதற்காக திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.   அப்போது, திருக்கழுக்குன்றத்திலிருந்து, வீராபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்துக்கு வந்ததாகவும். அப்போது, பேருந்து நிற்கும் முன்பே கோபி  ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயன்றதாகவும். ஆனால், திடீரென தவறி கீழே விழுந்த அவர்மீது அதேபேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில், கோபி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், திருக்கழுக்குன்றம்-கல்பாக்கம் செல்லும் சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரு கட்டிட விபத்தில்  தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி, அக்.24- கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்த லூர் கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பெங்க ளூருக்கு கூலி வேலைக் காக சென்றனர்.  பெங்களூருவில் 8 அடுக்கு கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வந்தது.  பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் போது அந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில் கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் மற்றும் மணிகண்டன் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். அதில் சத்யராஜ் என்பவர் சடலம் மீட்கப்பட்டது.  மணி கண்டன் என்பவர் சடலம் அடையாளம் காண முடி யாத நிலையில் சிதைந்து விட்டது. இதனால் அது மணி கண்டன் சடலம் தானா அல்லது வேறுயாருடைய சடலமா என மணிகண்டன் குடும்பத்தினர், உறவி னர்கள் குழப்பத்தில் உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிளை மாநாடுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போளூர் வட்டத்திற்குப்ட்ட கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் வருமாறு:
துரிஞ்சாபுரம் கிளை         - ரங்கநாதன்
மங்களாபுரம்             - கணேசன்
படவேடு            -சேகர்
சந்தவாசல்            - சரவணன்
புது காந்திநகர்            - சீனு
சங்கரய்யா நகர்        - ஆறுமுகம்
கருங்காலி குப்பம்        - சாமிக்கண்ணு
துரிஞ்சிகுப்பம்            - தனலட்சுமி
வடமாதிமங்கலம்        - வெங்கடேசன்
கீழ்பட்டு            - ராஜேந்திரன்
ராயங்குப்பம்            - முத்து
ஓகூர்                - சிவராமன்
களம்பூர்             - தனசேகர்
தரணி             - ஜோதி
போளூர்             - கிருஷ்ணமூர்த்தி
வசூர்                 - வேண்டா
எடப்பிரை             - விஜி
அத்திமூர்             - சரவணன்
வடகாடு             - அஞ்சலி
ஜமுனா மரத்தூர்         - பொன்னுசாமி
   ஆரணி வட்டம்
 ஆரணி (ஏ)             - விஜயன் 
ஆரணி ( பி)             - இளங்கோ 
சைதாப்பேட்டை         - எஸ் அருண்குமார் 
சேவூர்            - தமிழரசன் 
ரங்கநாதபுரம்              - கன்னியப்பன் 
ஆதனூர்(பெ             - திவ்யா 
ஆதனூர்             - வெங்கடேசன் 
முருகமங்கலம்         - ஆனந்தன் 
துருகம்             - ஆதிகேசவன் 
மெய்யூர்             - சந்திரசேகர்

கிளை மாநாடுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழுவிற்கு உட்பட்ட கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்:
வேளச்சேரி பகுதி
திருவான்மியூர் மார்க்கெட் ஏ     - தனம்
திருவான்மியூர் மார்க்கெட் பி     - ஏ.செல்வி
மாற்றுத்திறனாளி     - ஆர்.லாரன்ஸ்
விஜயநகர்         - பாரதி ராணி
அண்ணாநகர்         - சத்தியா தேவி
ஏரிக்கரை ஏ         - தேவகி
ஏரிக்கரை பி         - பி.தேவகி
தெற்குமாட வீதி         - சரவணன் (எ) சண்முகம்
திருவான்மியூர்         - செந்தாமரை கண்ணன்
ஆட்டோ ஏ         - டி.திருநாமம்
ஆட்டோ பி         - ஏ.எஸ்.அந்தோணி
அடையாறு         - கோபால்
திருவள்ளுவர் நகர் ஏ     - ஏ.பாபு
திருவள்ளுவர் நகர் பி     - அருள்ராஜ்
வேளச்சேரி         - பிரவீன் கிருஷ்ணன்
கானகம்         - ஆர்.திலகபாமா
பெரியார் நகர் இளம் பெ. - மு.நதிரா பானு
பெரியார் நகர் பெ     - ஏ - எம்.நசிமா
பெரியார் நகர் பெ     - பி - பா.சித்திரைச்செல்வி
பெரியார் நகர் ஏ     - சூர்ய பாலகுமார்
பெரியார் நகர் பி     - பொன்வேல்
பெரியார் நகர் சி     - பி.சரவணன்
காந்திநகர் ஏ         - ரமேஷ்
காந்தி நகர் பி         - சே.திவாகரன்
காந்தி நகர் பெ         - ஆர்.மோகனா
பாரதி நகர்         - அந்தோணி பெர்னான்டஸ்
பல்லாவரம் தொகுதி
தாங்கல்         - எம்.கோபால்
21 வது வார்டு          - வி. மாரியப்பன்