சென்னை, ஜன, 6 - போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் தொழிற்தவா எழுப்பி இருந்தன. இதன்மீது வெள்ளியன்று (ஜன.6) தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொழிலாளர் துணை ஆணை யர் லட்சுமிகாந்தன், சிஐடியு உள்ளிட்ட 4 சங்கங்களின் தலைவர்கள், மாநகர போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்புஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.ஆறு முக நயினார், இந்த ஆண்டு சட்டத்திற்கு குறைவாக போனஸ் வழங்கப்பட்டது. சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. அதன் சரத்துக்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்டவைகளில் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கும் நிலை உள்ளது. இதுகுறித்தெல்லாம் வலி யுறுத்தினோம். தொழிலாளர் தரப்பும், நிர்வாகமும் நேரடியாக பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அதுகுறித்த விவரங்களை பிப்.17ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தெரிவிக்க ஆணையர் அறிவுறுத்தி உள்ளார் என்றார்.